ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தாவரவியல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 196 பேருக்கு திங்கள்கிழமை (மே 27) பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 310 இளநிலை உதவியாளர்களுக்கும் ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,800-க்கும் அதிகமானோரைத் தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாவரவியல் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தாவரவியல் ஆசிரியர்கள் 196 பேர் கொண்ட பட்டியல் பள்ளிக் கல்வித் துறையிடம் அண்மையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆன்-லைன் மூலம் நடைபெறும் பணி நியமன கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்று, பணியிடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி