நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பு: திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பஞ்சாயத்து யூனியன், நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கும் இடங்கள் மற்றும் நேரம்:திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளியில், இன்று (28ம் தேதி) காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்குதல், மதியம், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.நாளை காலை, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணைவழங்குதல், மதியம், துவக்கப்பள்ளி தலைமையாசிர்களுக்கு மாறுதல்ஆணை வழங்குதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.மே 30ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்துக்குள்ளும், மதியம், இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விட்டு மாவட்டத்திற்குள்ளும் நடக்கிறது. 31ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி