விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2013

விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்.

"இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம்கூறினார்.அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக, கோவை அரசு இன்ஜி., கல்லூரி பேராசிரியர் ராஜாராம், நேற்று பதவியேற்றார். அவர் கூறியதாவது:அண்ணா பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில்உள்ள ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த, பல்கலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதுபோல, பொறியியல் படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.பொறியியல் படிப்பிற்கு, இதுவரை, இரண்டு லட்சத்து, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதில், ஒரு லட்சத்து, 89 ஆயிரம் விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.மாநிலம் முழுவதும், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. எனவே, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி