தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.கடந்த, 21ம் தேதி முதல் நடந்து வரும் கலந்தாய்வில், 10 ஆயிரம் பேர் வரை, பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில்,பிளஸ் 2வில், தொழிற்கல்வி படித்த மாணவ, மாணவியர், 5,242 பேர், பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வை, ஜூலை, 1 முதல் 12ம் தேதி வரை நடத்த, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.பல்கலை வளாகத்தில் உள்ள ராமானுஜம் கம்ப்யூட்டிங் மையத்தில் நடக்கும் கலந்தாய்வுக்கு, தினமும், 500 பேர் வீதம் அழைக்கப்படுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி