ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் விண்ணப்பம் விற்பனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் விண்ணப்பம் விற்பனை.

ஜூன்.28 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எட்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய தகுதித் தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெறவேண்டும்.ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஆகஸ்டு 17-ந்தேதி தாள்-1 (இளநிலை ஆசிரியர் பயிற்சி) 18-ந்தேதி தாள்-2 (பட்டபடிப்புடன் ஆசிரியர் பயிற்சி) தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் 17-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்படுகிறது.இரண்டு தேர்விற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தகுதியும் உடையவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதித்தேர்வு எழுத விண்ணப்பங்கள் வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருகிறார்கள்.10 நாளில் 8 லட்சம் படிவங்கள் விற்பனையாகி உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூலை 1-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.சென்னையை பொறுத்தவரை 21 அரசு பள்ளிகளில் தகுதித்தேர்வு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த முறை தேர்வு மையங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னையில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வடசென்னை மாவட்ட கல்விஅலுவலகம், அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி எழும்பூர், தென் சென்னை மாவட்டக்கல்வி அலுவலகம், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி எழும்பூர், கிழக்கு மாவட்ட கல்வி அலுவலகம், ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு, மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் சமர்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. படிவத்துடன் வங்கி செலான் இணைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்து அதன் நகலில் சீல் வைத்து விண்ணப்பதாரர்களுக்கு தருவதற்கு சிறிது நேரம் ஆகிறது. அதனால் 4 இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.  இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் கூட்டம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி