தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு.

"மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில், செப்.,25 ல், மறியல் நடத்தப்படும்" என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் தெரிவித்தார்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. பொருளாளர் ஜோசப் சேவியர் கூறியதாவது: 6வது சம்பள குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூ.8,550 என, குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பல போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டு கொள்ளவில்லை.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களை, பணிவரன் முறை செய்யவேண்டும் என்பதுஉட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 25ல் சென்னையில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி