கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில், ஆண்டுதோறும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள்மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன.இந்தாண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து, அதற்கான செலவுகள், ஆசிரியர்கள் நியமனம் குறித்து, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.ஆனால், கல்வித்துறை சார்பில், இன்னும் அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு சேர்வதற்கும், உயர்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ்1 சேருவதற்கு, இன்னும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.மாற்றுச் சான்றிதழை கொடுத்து விட்டால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவர்; அப்படி சேர்ந்து விட்டால், தரம்உயர்த்தப்பட்ட தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போய் விடும் என்ற சூழலில், பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர்.தற்போது, அனைத்துப் பள்ளிகளிலும், பிளஸ் 1 அட்மிஷன் முடிந்தநிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பள்ளிகளில் சேர, மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி