பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பெனின் தேவகுமார் தமிழக கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அளித்துள்ளமனு விவரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பணிவரன் முறை செய்யப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற பாடங்களுக்கு 7 பாடவேளை இருப்பதுபோல், சமூக அறிவியல் பாடத்துக்கும் 7 பாடவேளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி