"தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத்திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.அவர், மதுரையில் கூறியதாவது: தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகளின் அமைவிடம், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, நிவர்த்திக்க நடவடிகக்கை எடுக்கும்படி, அறிவுறுத்தப்பட்டது.நாங்கள் சுட்டிக் காட்டிய குறைகளை, நிவர்த்தி செய்யாமல், நிவர்த்தி செய்ததாக சில கல்லூரிகள், பதில் அனுப்பின. மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில், அது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை, சேலம், நாகபட்டினம் மாவட்டங்களில்,தலா, ஒரு பி.எட்., கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவற்றை மூட, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு, மாணவர்கள் சேர்க்கை இருக்காது. இவ்வாறு, விசுவநாதன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி