தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2013

தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு.

தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணி நியமனம், 15 நாளில் நிறைவு பெறும்.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 75 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 32,708 மாணவர்; 29,618 மாணவியர் என மொத்தம், 62,326 பேர் படித்து வருகின்றனர்.இதில், 26 மேல்நிலைப் பள்ளிகளில், ஓராண்டாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பிரச்னை குறித்து, "தினமலர்"நாளிதழில், கடந்த, 21ம் தேதி செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள, பள்ளிகளில் விரைவில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலியாக உள்ள பணியிடம் குறித்தும், ஆசிரியர்களின் பணி மூப்பு குறித்தும், தகவல் பெற்றுள்ளோம். அடுத்த மாத துவக்கத்தில், அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் பணியாற்றுவர்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி