பத்தாம் வகுப்பு மறுகூட்டல் நாளை முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2013

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் நாளை முடிவு வெளியீடு.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு, நாளை காலை, 10:30 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள், 26ம் தேதி (நாளை) காலை, 10:30 மணிக்கு, www.dge.tn.nic.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணத்தைச் சரியாகச் செலுத்தி, அதன் விவரங்கள், தேர்வுத் துறையால் பெறப்பட்ட மாணவர்களின் முடிவுகள் மட்டும், முதல்கட்டமாக வெளியிடப்படுகிறது.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், ஆக., 5 முதல், 8ம்தேதி வரை, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, பழைய மதிப்பெண் சான்றிதழைகளை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். முடிவு கிடைக்காத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் பின்புறம், பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), தேர்வுத் துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி