தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குஆங்கில உச்சரிப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குஆங்கில உச்சரிப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வி செயல்படுத்தப் பட்டுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.முதல்கட்டமாக 60 ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 19-ந் தேதி வரை ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகள் என மொத்தம் 10 நாட்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.சோடோஸ் தொண்டு நிறுவன கருத்தாளர்கள் ராமமூர்த்தி, பூர்ணிமா ஆகியோர் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குசான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர், மாணவர்களிடம் ஆங்கிலம் கற்றல் தாக்கத்தை ஏற்படுத்துவற்கும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறதுஎன்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.நடராஜன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி