அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான 3ம் கட்ட கலந்தாய்வு, 26ம் தேதி துவங்குகிறது.புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அரசுமேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதுவரை எந்த அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவர்கள், மதிப்பெண் அடிப்படையில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொண்டு இடம் பெற்றுக் கொள்ளலாம்.வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் கலந்தாய்வில், 300 முதல் 499 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களும், மதியம் 2:00 மணிக்கு, 201 முதல் 299 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 27ம் தேதி காலை 9:30 மணிக்கு 175 முதல் 200 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்களும், அன்று மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.கலந்தாய்விற்கு, மாணவர்கள் அசல் மற்றும் அவற்றின் நகல் சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் வர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி