40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி.

மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, சதுரங்கப் போட்டி துவங்கியது. செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.மாணவர்களிடையே, அறிவாற்றலை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவில் வரைக்கும், பல்வேறு நிலைகளில், சதுரங்கப் போட்டிகளை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, போட்டிகள் துவங்கின.சென்னை மாவட்டத்தில், 400 பள்ளிகளில் போட்டிகள் நடந்தன. அசோக் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளை, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டார். செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி