அரசு பள்ளி மாணவர்களின் கல்வி...கேள்விக்குறி 415 ஆசிரியர்பணியிடம் காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2013

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி...கேள்விக்குறி 415 ஆசிரியர்பணியிடம் காலி.

தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில், 415 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.கல்வி அறிவில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், கிராம பகுதிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கிராம பகுதி மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்காமல், மாவட்டத்தில், மாணவர்கள் உயர் கல்வியை எட்ட முடியாத நிலையுள்ளது. குறிப்பாக பெண்கள் கல்வி கேள்விக்குறியாக இருந்து வருகிறது.கிராம பகுதியில் இருந்து உயர் கல்விக்கு வரும் மாணவர்களுக்கு உரிய பஸ் வசதியின்மை, விடுதியில் இடம் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 390 நடுநிலைப்பள்ளிகளும், 115 உயர்நிலைப்பள்ளிகளும், 119 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.மலைக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு முறையாக செல்வதில்லை. சில பள்ளிகளில் அப்பகுதியை சேர்ந்த படித்த பட்டதாரிகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துக்கு நியமித்து கல்வி போதிக்கம் நிலையுள்ளது.கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் ஓரிரு ஆண்டுகளில் நகரப்பகுதி பள்ளிக்கு இடமாறுதல் பெற்று வந்து விடுகின்றனர். கிராம பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், மாணவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பள்ளிக்கு செல்வதும், படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு பள்ளிகளின் நிலை இப்படி என்றால், தனியார் பள்ளிகள் மாவட்டத்தில் போட்டி போட்டு கொண்டு மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுப்பதால், வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் நிலையுள்ளது.நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் முழுக்க, முழுக்க அரசு பள்ளிகளைநம்பியுள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. மாவட்டதத்டல்,129 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட, 415 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.தமிழ் ஆசிரியர் பணியிடம், 42, ஆங்கில ஆசிரியர் பணியிடம், 101, கணித ஆசிரியர்கள், 16, அறிவியல், 67, வரலாறு, 187 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. குறிப்பாக கிராமபகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள், 40 முதல், 60 சதவீதம் உள்ளது.நகரப்பகுதி ஆசிரியர் பணியிடங்கள் திருப்தியாக இருந்த போதும், முறையான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் சுயமாக கற்கும் திறன்கள் மூலம் அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் நிலையுள்ளது. பல பள்ளிகளில் பி.டி.ஏ., மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய போதும், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் ஆசிரியர் வருகைகளை உறுதிசெய்யவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

  1. உண்ணா விரதப்போராட்டம்
    கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை
    உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்
    உயர் நீதிமன்றம் 09.07.2013அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
    தேதி : 29.08.2013,வியாழக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    இடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னை
    அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நியாமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்
    இப்படிக்கு
    சான்றிதழ்சரிபார்க்கப்பட்டுபணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்
    குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல்கலந்துகொள்ளவும் .
    CONTACT :M.HARIKRISHNAN -9443578274

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி