மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வுஅளிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.கடந்த ஜூலை முதல்
முன்தேதியிட்டு வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வால் 80 லட்சம் ஊழியர்கள் பயன்அடைகிறார்கள்.10 சதவீத அகவிலைப்படி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு இன்னமும் அறிவிக்காமல் இருந்தது.இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு இப்போது முடிவு செய்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம்1-ந்தேதி முன்தேதியிட்டு வழங்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை(வெள்ளிக்கிழமை) கூடும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட உள்ளது.இதன் மூலம் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்து வரும் அகவிலைப்படி உயர்வு 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயருகிறது.ரூ.10,879 கோடி கூடுதல் செலவுஇந்த 10 சதவீத உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,879 கோடி செலவாகும். இது மத்திய அரசுக்கு ரூ.6,297 கோடி கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அளித்தது. அதன் மூலம் 72 சதவீத அகவிலைப்படியானது 80 சதவீதமாக உயர்ந்தது. தற்போது மத்திய அரசு 10 சதவீதம் அகவிலைப்படி அளித்ததால்,அகவிலைப்படி உயர்வு 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது.இரட்டை இலக்க அகவிலைப்படிமத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்து உள்ளது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களை மகிழ்விக்க இந்த அகவிலைப்படி உயர்வை அரசு அளித்ததாக கூறப்படுகிறது.80 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்மத்திய அரசு அறிவிக்கும் இந்த அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசில் உள்ள 50 லட்சம் அரசு ஊழியர்களும்,30 லட்சம் மத்திய அரசின் பென்சன்தாரர்களும் பயன் அடைகிறார்கள்.
முன்தேதியிட்டு வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வால் 80 லட்சம் ஊழியர்கள் பயன்அடைகிறார்கள்.10 சதவீத அகவிலைப்படி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு இன்னமும் அறிவிக்காமல் இருந்தது.இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு இப்போது முடிவு செய்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம்1-ந்தேதி முன்தேதியிட்டு வழங்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை(வெள்ளிக்கிழமை) கூடும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட உள்ளது.இதன் மூலம் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்து வரும் அகவிலைப்படி உயர்வு 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயருகிறது.ரூ.10,879 கோடி கூடுதல் செலவுஇந்த 10 சதவீத உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,879 கோடி செலவாகும். இது மத்திய அரசுக்கு ரூ.6,297 கோடி கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அளித்தது. அதன் மூலம் 72 சதவீத அகவிலைப்படியானது 80 சதவீதமாக உயர்ந்தது. தற்போது மத்திய அரசு 10 சதவீதம் அகவிலைப்படி அளித்ததால்,அகவிலைப்படி உயர்வு 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது.இரட்டை இலக்க அகவிலைப்படிமத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்து உள்ளது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களை மகிழ்விக்க இந்த அகவிலைப்படி உயர்வை அரசு அளித்ததாக கூறப்படுகிறது.80 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்மத்திய அரசு அறிவிக்கும் இந்த அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசில் உள்ள 50 லட்சம் அரசு ஊழியர்களும்,30 லட்சம் மத்திய அரசின் பென்சன்தாரர்களும் பயன் அடைகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி