போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி­நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி­நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை.

போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாந­க­ராட்சி பள்­ளி­களில் ஆசிரியர்க­ளாக உள்ள ஒன்­பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்­யப்­பட உள்ளனர். ஓரிரு நாளில்அவர்கள் கைது செய்­யப்­ப­டுவர் என,
மாந­க­ராட்சி வட்டாரங்கள் தெரி­வித்­தன.சென்னை மாந­க­ராட்சி பள்­ளியில் பணி­பு­ரியும் இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர் போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்­தி­ருக்கும் அதிர்ச்சி தகவல் சமீ­பத்தில் வெளி­யா­னது. இது­கு­றித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாந­க­ராட்சி கல்வி துறை அதி­கா­ரிகள் விசாரித்தனர். இதில், முதல்­கட்­ட­மாக சந்­தேக வலையில் இருந்த 76 ஆசி­ரி­யர்­களின் சான்­றி­தழ்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், ஒன்­பது பேரின் சான்­றி­தழ்கள் போலி என, உறு­தி­யா­னது.இந்த ஒன்­பது பேரும் 10ம் வகுப்பு பொதுத்­தேர்வு சான்­றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்­றிதழ் வரை பல்­வேறு கட்டங்­களில் போலி சான்­றி­தழ்­களை வழங்­கி­யுள்­ளனர். ஐந்து ஆசி­ரி­யர்கள், 10ம் வகுப்பு பொதுத்­தேர்வில் தேர்ச்சி பெற­வில்லை. மறு­தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல், தேர்ச்சி பெற்றதாக போலி சான்­றிதழ் வழங்­கி­யுள்­ளனர்.பிளஸ் 2 தேர்வில் நான்கு ஆசி­ரி­யர்கள் தேர்ச்சி பெற­வில்லை. ஆனால், தேர்ச்சி பெற்­ற­தாக போலி சான்­றிதழ் வழங்­கி­உள்­ளனர். ஆறு ஆசி­ரி­யர்கள் ஆசி­ரியர் பட்­டய பயிற்சி பெற்­ற­தாக வழங்­கி­யுள்ள சான்­றி­தழ்கள் போலியானவை.இதை­ய­டுத்து, மாந­க­ராட்சி நிர்­வாகம் கல்வி அதி­காரி ரவிச்­சந்­திரன் மூலம் கடந்த சில தினங்­க­ளுக்கு முன் போலீஸ் கமி­ஷ­ன­ரிடம் புகார் அளித்­தது.அதன் அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்கள் ஒன்­பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதற்­கி­டையே, அவர்­க­ளுக்கு நோட்டீஸ் வழங்கி, பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்­கான பணியில் மாநக­ராட்சி இறங்­கி­யுள்­ளது. ஒன்­பது போலி ஆசி­ரி­யர்கள் பெயரை மாநகராட்சி அதிகா­ர­பூர்­வ­மாக வெளியிட­வில்லை.தொடர் விசா­ர­ணையில் போலி சான்றிதழ் ஆசி­ரி­யர்கள் இன்னும் சிலர் சிக்குவர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், தற்­போது சிக்­கி­யுள்­ள­வர்கள் அனை­வரும், 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்­டுக்குள் பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு கணி­ச­மான தொகையை லஞ்­ச­மாக கொடுத்து பணியில் சேர்ந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.இதனால் அப்­போது மாந­க­ராட்சி கல்வி துறையில் யார், யாரெல்லாம் அதிகாரி­க­ளாக பணி­பு­ரிந்­தார்­களோ அவர்­களும் விசா­ரணை வளை­யத்­திற்குள் வருவார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி