ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2013

ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை.

மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வர தடை விதித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் செல்போன் எடுத்துசெல்வது,பள்ளியில் செல்போனில் பேசுவது கூடாது. அதேபோல ஆசிரியர்களும் செல்போனில் பேசக்கூடாது என்று கடந்த2008,2009ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தரவை கொண்டு வந்தது. ஆனால்,அந்த உத்தரவை பள்ளிகளில் யாரும் பின்பற்றுவது இல்லை. ஆசிரியர்களே பள்ளி வளாகத்தினுள் செல்போனில் பேசுகின்றனர்.பள்ளி வளாகத்துக்குள் செல்போன் பயன்படுத்துவது குறித்து பல புகார்கள் வந்ததன் பேரில் தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனர் மீண்டும் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோ நேற்றுவெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி மாணவர்கள்செல்போன் பயன்படுத்துவதால் அவர்களின் கவனம் முழுக்க சிதறுகிறது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தடை உத்தரவைசெயல்படுத்தும் விதமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களின் கவனம் சிதறும். எனவே வகுப்பறையில் பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களும் இந்த உத்தரவை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை யின் கீழ் வரும் பள்ளிகள்1முதல்8ம் வகுப்பு வரைதான். உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் வருகிறது. தொடக்க கல்வித்துறை மட்டும் செல்போனுக்கு தடை விதித்துள்ள நிலையில்,பள்ளி கல்வியின் கீழ்வரும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தலாமா என சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி