காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-பள்ளிகல்வி இயக்குநர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-பள்ளிகல்வி இயக்குநர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளி கல்வி
இயக்குநர் வி.சி.ராமஸ்வரமுருகன்,மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளி மாணவ,மாணவிகள் மத்தியில் பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும்,சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகளையும்,கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும்,கொடுத்து மகிழும் விழாவை (ஜாய் ஆப்கிவ்விங்) அனைத்து பள்ளிகளிலும் வரும் அக்டோபர் 2ம் தேதிமுதல் 8ம் தேதி வரை கொண்டாட வேண்டும்.இந்த விழாவை கொண்டாடும் வகையில் மாணவ,மாணவிகள் கீழ்காணும்செயலில் ஈடுபடலாம். தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யலாம். முதியவர்கள் சாலையை கடக்க உதவலாம்.அருகில் உள்ள முதியோர் இல்லம்,ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடலாம். பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யலாம். முதியோர்களுக்கு தினசரிநாளிதழ்களை வாசித்து காட்டலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி