நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2013

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.

"நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்'திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நாளை (16ம் தேதி) ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என தவறான தகவல் பரப்பபட்டது. இந்த தகவலால் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.ஆனால் நாளை (16ம் தேதி) மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். வழக்கமான அனைத்து பணிகளும் பள்ளிகளில் நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்,திருப்பூர்  மாவட்டங்களுக்கு மட்டுமே நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி