தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து,
தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் இருந்து, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக, எஸ்.எஸ்.ஏ.,திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர், எவ்வித சிக்கலும் இன்றி சம்பளம் பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, அரசாணையை வெளியிடும். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 5,146 ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கு வழி வகை செய்யும் அரசாணை, கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிந்துவிட்டது. ஆனாலும், அரசாணை இல்லாமலேயே, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.இந்நிலையில், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், அரசாணை இல்லாததை சுட்டிக்காட்டி, கடந்த மாதம் சம்பளம் வழங்க, கருவூல அதிகாரிகள் மறுத்தனர். இது குறித்து, கடந்த மாதம், 24ம் தேதி,தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன், தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், 5,146 ஆசிரியர்களின் பணியிடங்களை, வரும் டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் இருந்து, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக, எஸ்.எஸ்.ஏ.,திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர், எவ்வித சிக்கலும் இன்றி சம்பளம் பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, அரசாணையை வெளியிடும். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 5,146 ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கு வழி வகை செய்யும் அரசாணை, கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிந்துவிட்டது. ஆனாலும், அரசாணை இல்லாமலேயே, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.இந்நிலையில், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், அரசாணை இல்லாததை சுட்டிக்காட்டி, கடந்த மாதம் சம்பளம் வழங்க, கருவூல அதிகாரிகள் மறுத்தனர். இது குறித்து, கடந்த மாதம், 24ம் தேதி,தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன், தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், 5,146 ஆசிரியர்களின் பணியிடங்களை, வரும் டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி