மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2013

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு.

மத்திய அரசு ஊழியர்கள்,ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை,என்று,மத்திய பணியாளர்நலத்துறை இணை அமைச்சர்,நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.மத்திய அரசு
ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது,தற்போது, 60ஆக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில்,மொத்தம், 50லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ள நிலையில்,ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு,ஓய்வு கால பலன்,பணிக்கொடை ஆகியவற்றை மொத்தமாக வழங்க முடியாத நிலை உள்ளதால்,மத்திய பணியாளர் அமைச்சகம்,மத்திய அரசு ஊழியர்களின் வயதை, 62ஆக உயர்த்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கிளம்பின.லோக்சபா தேர்தலை மனதில் வைத்து,மத்திய அரசு பல அறிவிப்புகள் வெளியிடுவதால்,அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இதனால்,ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது குறித்து,மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர்,நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்கையில், ""இப்போது வரையில்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து,அரசுக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இதை திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறேன்,''என்றார். மத்திய அரசு ஊழியர்களின்,ஓய்வுபெறும் வயது முன்பு, 58வரை இருந்ததை, 1998ல்60ஆக உயர்த்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வுபெறும் வயது, 62ஆக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி