தொழிலாசிரியர் பயிற்சிக்கு அரசு தடை : பதிவுதாரர்கள் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2013

தொழிலாசிரியர் பயிற்சிக்கு அரசு தடை : பதிவுதாரர்கள் தவிப்பு.

கடந்த 2007 க்குப் பின், தொழிலாசிரியர் பயிற்சி வழங்கப்படாததால், 8,000க்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தையல்,
ஓவியம், விவசாய படிப்புகளில் "டிப்ளமோ' படித்த பின், அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பள்ளிகளில் ஆசிரியராக சேரமுடியும்.கடந்த 2011-12 ல் இருந்து, அரசுத் தேர்வு இயக்குனரகம், "டிப்ளமோ' தேர்வுகளை மட்டுமே நடத்தி, முடிவுகளை வெளியிடுகிறது. தொழில் ஆசிரியர்களுக்கு, மூன்று மாத பயிற்சி வழங்க தடை விதித்து விட்டது. இதனால், 8,000 க்கும் மேற்பட்ட தொழில் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பயிற்சி முடித்தவர்கள், பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"2011 க்கு முன் வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.அவர்களுக்கே பணி கிடைக்கவில்லை. அதற்குப் பின், 8,000க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், பணி வழங்குவது சாத்தியமில்லை. இதனால், 3 மாத பயிற்சி திட்டத்தை, அரசு நிறுத்தி விட்டது' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி