தகுதித் தேர்வை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

தகுதித் தேர்வை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு 2009–ம் ஆண்டு அறிவிப்பு
வெளியிட்டது. இதன் அடிப்படையில் 32 ஆயிரம் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2010–ம் ஆண்டு நடைபெற்றது,இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி வழங்க வேண்டும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010–ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது.இதன் அடிப்படையில் தமிழக அரசு 2011–ம் ஆண்டு ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.இதையடுத்து 2010–ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு அளித்தனர்.அந்த தீர்ப்பில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதித் தேர்வு குறித்து அறிக்கை பிறப்பிப்பதற்கு முன்பு மனுதாரர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. எனவே இவர்களுக்கு தகுதித் தேர்வு எழுதினால்தான் வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பொருந்தாது. வழக்கு தொடர்ந்த 152 பேருக்கு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்துள்ள 152 பேருக்கு மட்டுமே பொருந்தும்.இவ்வாறு தீர்ப்பில் கூறி இருந்தனர்.இதையடுத்து மேலும் பல ஆசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.இந்த வழக்கை நீதிபதி பரந்தாமன் விசாரித்தார். வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி