இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2013

இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள்
போன்றவை நடத்தப்பட உள்ளதாக அனைவருக்கும்கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் கணக்கெடுப்பின் படி மொத்தம் 1322 மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களாக கண்டறியப்பட்டனர்.இதில் அனைத்து வட்டார பகுதியில் 1145 மாணவர்கள் நிரந்தர பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையம், நீண்ட கால சிறப்பு பயிற்சி மையம் போன்றவற்றில் அவர்களது வயதிற்கு ஏற்ப அனைவருக்கும் கட்டாயகல்விச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 17 இடங்களில் நீண்ட கால மையங்களாக செயல்பட்டு வருகிறது.7 இடங்கள் குறுகியகால மையங்களாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார், கயத்தார் ஆகிய இடங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் உறைவிட மையங்களாக செயல்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் 95 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் அதில் 50 மாணவர்கள் தற்போது வெளியே சென்று விட்டனர். மீதியுள்ள 45 மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்பார்வையாளர்கள் மற்றும்ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கிடையில் இடையில் நின்ற மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க கூடிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 31 கல்வித்தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று தூத்துக்குடிசி.வ. அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்களானகருத்தாளர்கள் தேவபிரபு, சேகர், மெல்சியா, முத்துக்குமார், ஆனந்த் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் கூடுதல் சி.இ.ஓ சரோஜா பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியில் இடையில் நின்ற 45 மாணவர்களையும் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட வேண்டும். இது நமது பொறுப்பாகும். இடையில் நின்ற மாணவர்கள் பள்ளிகளில் எப்படி படிக்கிறார்கள் என்பதை அடிக்கடி சென்று கண்காணித்து கொள்ள வேண்டும்.பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன. வரும் 9ம் தேதி (அக்டோபர்) அனைவருக்கும் கல்வி இயக்கம்,பி.ஏ.டி தொண்டு நிறுவனம், சைல்டு லைன் ஆகியவை இணைந்து தருவைகுளம் பகுதியில் விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், மாணவ, மாணவிகளின் பேரணி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு சரோஜா தெரிவித்தார்.நேற்று துவங்கிய பயிற்சி நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி