பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு.

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்
பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்வார்கள். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள பள்ளிக்கு கலந்தாய்வு மூலம் மாற்றப்படுவார்கள்.ஆனால், கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில்,சமீப காலங்களில் இடமாறுதல் உத்தரவு விநோதமாக பிறப்பிக்கப்படுகிறது. இடம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர், தற்போது பணியாற்றும் பள்ளியிலும், இடமாறுதல் பெற்றுச் செல்லும் பள்ளியிலும் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.ஒரு ஆசிரியர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு பள்ளியிலும் மூன்று நாட்கள் மற்றொரு பள்ளியிலும் பணியாற்ற உத்தரவு வழங்கப்படுகிறது.இதனால் ஆசிரியர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் மீது முழுமையான கவனம் செலுத்த முடியாது.ஆசிரியர் பற்றாக்குறையால் தான், கள்ளர் சீரமைப்புத் துறை இந்த விநோத உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி