தேர்வு பயம், மன அழுத்தம் ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

தேர்வு பயம், மன அழுத்தம் ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு.

மாணவர்களின் தேர்வு பயம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றைப் போக்க ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா 2 ஆசிரியர்களுக்கு
பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கும் மனநல ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்குவது பள்ளிக் கல்வியின் முக்கிய அம்சம் என மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.இதற்காக மாநில அளவிலும், பள்ளிகள் அளவிலும் மன நல ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியருக்குப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான பயிற்சியை ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்க உள்ளன.மாநில அளவிலான குழு: தமிழகத்தில் மாநில அளவிலான மன நல ஆலோசனைக் குழு அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலக் குழுவுக்கும், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தலா2 விரிவுரையாளர்களுக்கும், 2 பயிற்றுநர்களுக்கும் சென்னையில் மன நல ஆலோசனையில் பயிற்சி வழங்கப்படும்.பிறகு அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மன நல ஆலோசனையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்,மாணவர்களை சிறப்பாக வழிநடத்துவார்கள் என கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி