இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது.

இந்தியாவில், 21 போலி பல்கலைக் கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பல்கலைகழக மானியக்குழு அறி வித்துள்ளது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி,
மத்திய, மாநிலஅரசால் நிறுவப்பட்டுள்ள பல்கலைகள் மட்டுமே, யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேறு எந்த கல்வி நிறுவனமும், யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி,இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை நடத்தி, அதற்கென பட்டங்களை வழங்குவது, யு.ஜி.சி., சட்ட விதியின்படி, தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் கல்வி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பாயும் எனவும், அது எச்சரித்துள்ளது.இந்தியா முழுவதும், யு.ஜி.சி., சார்பில், நடத்தப்பட்ட ஆய்வில், 21 பல்கலைகள் போலியானது என, கண்டறி யப்பட்டு, அதன் அதிகார பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில் 9, டில்லி 5, பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றில், தலா ஒன்றுஎன, போலி பல்கலைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாறவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி