25, 26, 27 தேதிகளில் நடைபெறும் குரூப்–1 தேர்வை தமிழ் அல்லதுஆங்கிலத்தில் எழுதலாம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

25, 26, 27 தேதிகளில் நடைபெறும் குரூப்–1 தேர்வை தமிழ் அல்லதுஆங்கிலத்தில் எழுதலாம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு
ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பொது அறிவுத்தாள் 1, 2, 3ஆகியவற்றில் விடைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம். ஒரு பகுதி தமிழிலும் மறு பகுதி ஆங்கிலத்திலும் கூட விடையளிக்கலாம்.ஆனால் பொது அறிவுத்தாள் 2–ல் உள்ள பகுதி–2 தமிழ் மொழி, அல்லது ஆங்கில மொழி பகுதியை பொறுத்தமட்டில் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து விடை அளிக்க வேண்டும். இது குறித்து சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail,com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மைய தொலைபேசி எண் 1800 425 1002 மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி