பி.எப்., ஓய்வூதியர்கள் நவ.30க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2013

பி.எப்., ஓய்வூதியர்கள் நவ.30க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுரை.

தொழிலாளர் ஓய்வூதியம் பெறுபவர்கள் நவம்பர் 30க்குள் உயிர்வாழ்சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என பி.எப்., மண்டல கமிஷனர்
சவுரப் சுவாமி தெரிவித்தார்.நெல்லை மண்டல பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி அறிக்கையில் கூறியதாவது, தொழிலாளர் ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் உயிர்வாழ் சான்றிதழ், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் படிவங்களை தாங்கள் ஓய்வூதியம் பெறும் பாங்கில் நவம்பர் 30 க்குள்அளிக்க வேண்டும். உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களின் ஓய்வூதியம் ஜனவரி 2014 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். சான்றிதழ் படிவங்களை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி