சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர் ஆப்சென்ட்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர் ஆப்சென்ட்?

தமிழகம் முழுவதும், 14 மையங்களில், நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், அதிகமானோர், "ஆப்சென்ட்" ஆனதாக கூறப்படுகிறது.சென்னை மற்றும்
திருவள்ளூர் மாவட்டங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதற்கு, 72 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 70 பேர் மட்டும் பங்கேற்றனர். 70 பேரும், உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இன்று நடக்கும் சரிபார்ப்பிற்கு, 70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இதர 13 மையங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், அதிகமான தேர்வர்கள்,"ஆப்சென்ட்" ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், இதில், பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என, ஏற்கனவே, டி.ஆர்.பி., திட்டவட்டமாக அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி