விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்.

விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ., சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெரும் வகையில் குறைந்த விலையில் வினா விடை வங்கி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதிலும் 36 மையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வினா விடை புத்தங்கள் விற்பனை துவங்கியது. தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாவிடை புத்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்வழி வினா விடை புத்தகங்கள் 180 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 தமிழ் வழி வினாவிடை புத்தங்கள் 325 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பிளஸ் 2 வினா விடை புத்தங்கள் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், இரண்டு நாட்களில் இங்கு விற்பனை கொண்டு வரப்பட்ட ஆங்கில வினா விடை விடை புத்தங்கள் விற்பனை ஆனது.நேற்று (அக்., 26) ஆங்கில வழி வினா விடை புத்தங்களை வாங்க வந்த மாணவ, மாணவிகள் புத்தகங்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினர். கூடுதல் வினா விடை புத்தங்கள் கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.விடுபட்டுள்ள தாவரவியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை புத்தகங்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்களை பள்ளிக் கல்வித்துறை எடுக்க மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: "தற்போது முதற்கட்டமாக பெரும்பாலான பாடங்களின் வினா, விடை புத்தங்கள் வந்துள்ளன. ஆனாலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான பாடமான தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை தற்போது விற்பனைக்கு வரவில்லை. இப்பாடங்களின் வினாவிடை புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி