அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் கூட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் கூட்டம்.


அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.மாவட்டத்தலைவர் அனந்தராஜ் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர்
பிரபாகரன் தீர்மானங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். கோவை மாவட்ட தலைவராக ராஜாதேவகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளதற்கு நன்றி கூறினர். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் ரவி செல்வகுமார், சக்திவேல், ஆனந்தகுமார், வினோத், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிருந்தா, லட்சுமி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி