கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நீடித்து வந்த மேல் அடுக்குச் சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதால், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில், திருவொற்றியூர், பாரிமுனை, மெரினா, அடையார், பூந்தமல்லி, கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மேலும் சில தினங்களுக்கு மழை தொடர வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதால், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி இறங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

3 comments:

  1. Dear, friends tntet results will be publish november 2nd week. See todays papers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி