மத்திய பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2013

மத்திய பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு.

மத்திய பொதுப்பணித்துறையில் குரூப் 'சி' அளவில் தென்னிந்தியப் பகுதியில் உள்ள காலிப்பணியிடங்களில் சேர விரும்பு வோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சிவில் பிரிவில்
Draughtsman பணிக்கு சென்னை, திருச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு காலிப்பணியிடம் உள்ளது.இதேபோல் எலக்ட்ரிக்கல் பிரிவில் Draughtsman பணிக்கு ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு காலிப்பணியிடம் உள்ளது.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டு கால அளவிலான பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.தொடர்புடைய பிரிவில், ஓராண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி இறுதி செய்யப்படும்.கூடுதல் விவரங்களுக்கு www.cpwd.gov.in/southernregion என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி