அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2013

அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று ஆய்வு.

அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர்,பழனியப்பன்,
நேற்று ஆய்வு செய்தார். தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையிலும், தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்களைசெல்வதை தடுத்து நிறுத்தும் வகையிலும், அரசு பள்ளிகளில், படிப்படியாக ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எத்தனை அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பது குறித்து, பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பழனியப்பன், நேற்று, சென்னையில்ஆய்வு செய்தார்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறை முதன்மைசெயலர், சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன், அமைச்சர், ஆலோசனை நடத்தியபோது, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே, தேவையான நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் எனவும், அமைச்சர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி