படித்துக் கொண்டே பணி: உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

படித்துக் கொண்டே பணி: உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு பதிவு.

படித்து கொண்டே பணியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.லாஸ்பேட்டை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுஜித்ஜெயன் அலெக்ஸ் (25). கருவடிக்குப்பத்தில் உள்ள அரசு
உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பணியில் இருந்துகொண்டே போளூரில் உள்ள உடற்கல்வி கல்லூரியில் படித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மணிபாலன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.விசாரித்த ஐகோர்ட், சுஜித்ஜெயன் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்ய லாஸ்பேட்டை போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சுஜித்ஜெயன் அலெக்ஸ் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி