தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு.

தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின்
காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் 2013-14ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. இப்பிரச்சனை குறித்து ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கும், இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து மேற்காணும் ஒன்றியங்களில் ஆசிரியர்களின் எதிர்ப்பால் தடைப்பட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி