குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2013

குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது.


டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் -0 33, உதவி இயக்குனர் 10 ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஜன., 30ம் தேதி கடைசி நாள். முதல்நிலை தேர்வு ஏப்., 26ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி