2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி.


எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய
சுகாதாரத் துறை மந்திரி குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலமாக அவர் பதில் அளித்துள்ளார். "31-3-2012 நிலவரப்படி, நாடு முழுவதும்உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 3,459 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 3,005 மகப்பேறு மருத்துவர்கள், 3,270 குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் 3,667 உடற்கூறியல் மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 2,489 பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவ படிப்பிற்கான கல்வியாண்டு 2015-16 முதல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் பயிற்சி டாக்டர்களுக்கான நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது" என தனது பதிலில் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி