23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.


பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாள் December 23 தான்.

எனவே பள்ளியின் கடைசி வேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே..? என்ன செய்வது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில்ஏற்பட்டுள்ளது....
விளக்கம்:

* இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே(24.12.13 to 01.01.14).

* பள்ளிக்கு வருகை தராமல் (விடுப்பு+விடுமுறை) அதிகபட்சம் 10 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்(கோடை விடுமுறை தவிர)

* 11வது நாள் பணிக்கு திரும்பாவிட்டால் மட்டுமே விடுப்பின் வகை மாற்றப்படும்(EL).

* தற்பொழுது இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே. 23 அல்லது 2-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்தாலும் மொத்தம் 10 நாட்கள் தான் ஆகிறது(21,22 சனி, ஞாயிறு சேர்க்கப்பட மாட்டாது. நாம் CL எடுக்கும் நாளிலிருந்து தான் கணக்கிடப்படும்).

*23-ம் தேதி CL எடுத்தால் ஐனவரி 2-ம் தேதி பள்ளி திறந்ததும் பணியில் சேர்ந்துவிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

* 23.12.13 அன்று CL எடுக்காவிடில் 02.01.14 தாராளமாகCL இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்.

*எனவே தாராளமாக பள்ளி கடைசி வேளை நாளான 23.12.13 அல்லது 02.01.14 அன்று தற்செயல்விடுப்பு இருத்தல் எடுத்துக்கொள்ளலாம்.

* 21.12.13 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டதிற்கு பள்ளி வேளை நாள்.அவர்கள் 21.12.13 அன்று CL எடுத்திருந்து 23.12.13 அன்றும் CL தேவைப்படின் 23.12.13 அன்று காலை அரை நாள் மட்டுமே CL எடுத்துக்கொள்ளலாம்.

இவர்கள் 21.12.13 அன்று காலை அரை நாள் மட்டும் CL எடுத்துவிட்டு மதியம் பள்ளிக்கு வந்திருந்தால் , 23.12.13 அன்று முழு நாள் CL தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

தோழமையுடன்
-தேவராஐன் , தஞ்சாவூர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி