எம்.எல்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும், 30ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, சட்டக்கல்வி இயக்குனர்,நாராயண பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும், எம்.எல்., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும், 30ம் தேதி காலை 9:00 மணி முதல், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.கலந்தாய்வுக்கான கடிதம் பெற்ற விண்ணப்பதாரர் மற்றும், "கட் ஆப்" மதிப்பெண்ணுக்குள் இடம் பெற்று, கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வு நாள் மற்றும் நேரத்தில் மாற்றம் கோர இயலாது. இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி