அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!


உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி
நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது: R&D முதலீட்டைப் பொறுத்தவரை, சீனா 385 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 228 நிறுவனங்களும், அமெரிக்காவின் விரிகுடா பகுதியில் 220 நிறுவனங்களும் உள்ளன.R&D துறையில் அதிக நிதி ஆதாரத்தை வைத்துள்ள நிறுவனங்கள், இந்தியாவை அத்துறைக்கான முதலீட்டிற்கு சிறந்த இடமாக கருதுகின்றன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில், R&D துறையில் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய R&D துறை செலவினத்தில், 40% அளவிற்கு, வடஅமெரிக்காவில் தமது தலைமையகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 34% அளவிற்கு ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 18% ஜப்பானில் இயங்கும் நிறுவனங்களையும், 7% ஆசிய-பசிபிக் நாடுகளை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி