கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2013

கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.


கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் வட்டத்துக்குள்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி தொடக்க கல்வி அலுவலர் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரிய பயிற்றுநர்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். பின்தங்கிய மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.இதற்காக ஜனவரி மாதத்துக்குள் கல்வி உபகரணங்களை தயாரித்து அவர்களின் கல்வித் திறனை முழுமையாகப் மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கடலூர் வட்டத்துக்குள்பட்ட 280 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி