சென்னை உயர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, 25ம்தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை கிறிஸ்துமஸ்விடுமுறை. இந்த நாட்களில், முக்கியவழக்குகளை விசாரிக்கும் வகையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.வரும், 30ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில், நீதிபதி கே.பி.கே.வாசுகி மற்றும் நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய, அவசர வழக்குகளை மட்டும் கவனிப்பர். அதே போல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், மகாதேவன் ஆகியோர், 30ம் தேதியன்று வழக்குகளை கவனிப்பர்.அவசர மனுக்கள்தாக்கல் செய்ய விரும்புவோர், 27ம் தேதி பிற்பகல், 1:30 மணிக்குள், தங்கள் மனுக்களை சிறப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி