பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்'கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்' என பதில் கொடுத்துள்ளனர்.உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வுக்காக, பணிமூப்பு பட்டியலில் உள்ள பட்டதாரிகள், தமிழாசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு டிச., 14ல் "கவுன்சிலிங்' நடந்தது.இதற்கிடையே, அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,) திட்ட மேற்பார்வையாளர்கள், அப்பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான"கவுன்சிலிங்'கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.இதனால், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்கள் பலருக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாய்ப்பு கிடைத்ததால், பட்டதாரி, தமிழாசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை. தூரத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே பணியிட வாய்ப்பு கிடைத்தன.இதனால், 248 இடங்களுக்கு நடந்த "கவுன்சிலிங்'கில், "பேனலில்' இருந்து அழைக்கப்பட்ட 156 ஆசிரியர்கள் வரை, "பதவி உயர்வு தற்காலிகமாக வேண்டாம். தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுகிறேன்,' என, எழுதிக்கொடுத்துள்ளனர்.இதில், பெரும்பாலும் ஆசிரியைகள். குடும்பச் சூழ்நிலை, அவசர அழைப்பு, தொலைதூர இடவாய்ப்பு போன்ற காரணங்களால் "கவுன்சிலிங்'கை வெறுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கச் சட்டச் செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்களையும் இதில் சேர்த்து "கவுன்சிலிங்' நடத்தி விட்டனர். மேலும்,ஒரேநாள் இரவில் எவ்வித "ரெக்கார்டு'ம் இல்லாமல், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை போனில் அழைத்து, ""நாளை காலை பதவி உயர்வு "கவுன்சிலிங்' கட்டாயம் பங்கேற்க வேண்டும்,'' என, தகவல் கூறப்பட்டது. மேலும், பலருக்கு விரும்பிய இடமும் பறிபோனதால், குறிப்பாக, ஆசிரியைகள் "கவுன்சிலிங்'கை வெறுத்து, பெயருக்கு பங்கேற்று திரும்பினர். பதவி உயர்வு "கவுன்சிலிங்'கால் எவ்வித பயனும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி