அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2013

அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு.


கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் இதர பணியாளர்களின்
வருகைப் பதிவை கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 38 பாலிடெக்னிக்குகள் மற்றும் 9 பொறியியல் கல்லூரிகள் போன்றவை, இந்த பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவை கண்காணிப்பதால், ஆசிரியர்கள் சரியாக வகுப்புக்கு வருவதில்லை என்று மாணவர்களிடமிருந்து வரும் புகார்களை களைவதற்கு வழியேற்படும்.தற்போது மாநிலத்தில் 362 முதல்நிலை அரசு கல்லூரிகள் உள்ளன. பயோமெட்ரிக் மூலம், ஒவ்வொரு பேராசிரியரின் வருகைப் பதிவையும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி