தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2013

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம்.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள, தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வுமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு,
ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவிதொகை வழங்குகிறது.குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள, எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் தேர்ச்சி அடைய, எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 50சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகைவழங்கப்படுகிறது.

இந்த கல்வியாண்டில், பிப்., 22 ல், திறன் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, வரும், 28 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு வரை, மாவட்டத்திற்கு இரண்டு மையங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வில் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என,தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி