திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை தொடங்கியது.
மெட்ரிக். துறையின் இணை இயக்குநர் கார்மேகம் மேற்பார்வையில், மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத், மாவட்டகல்வி அலுவலர்கள் வீ.மதியழகன் (திருவண்ணாமலை), டி.ஜோசப்ராஜ்(செய்யாறு), மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் சசிகலாவதி உள்ளிட்டோர்இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்.அருண்பிரசாத் கூறியதாவது:7 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு தலா 25 பேர் என 175 பேரின்சான்றிதழ்சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி ஜனவரி 20 முதல் 27வரை நடைபெறும். இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 413பேரும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 716 பேரும் என1,129 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
My w-80 maths
ReplyDeleteHowmany candides passed in maths Thiruvannamalai
ReplyDeleteVerification is going on smoothly
ReplyDelete