திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி


திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தியதகுதித்தேர்வு1,2 தாள்களை மாவட்டத்தில் 14,573 பேர் எழுதினர். இதில் 1368பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல மாநிலம் முழுவதும் திங்கள்கிழமைதொடங்கியது. 20 முதல் 23-ம் தேதி வரை தாள் 1-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 24 முதல் 28-ம்தேதி வரை தாள் 2-ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இப்பணிக்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கண்ணப்பன் மேற்பார்வையிலசான்றிதழ் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

1 comment:

  1. paper 2 maths weitage 73&tet 93 any opportunity to get a job? & community mbc.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி